Posts

தமிழை முறையாக கற்கும் படிமுறைகள்

Image
தமிழ் கற்பதின் ஆதி அந்தம் என்ன ? பாயிரம் தமிழ் கற்பதை பெரும்பாலோர் ஏதோ மொழி கற்பதாக மட்டுமே எண்ணுகின்றனர். அதன் பயன்பாடும் பேச்சளவிலும் வாசித்து புரிந்துகொள்ளும் அளவிலும் தான் இருக்கிறது. ஆனால் தமிழ், வேல் போல் எவ்வளவு ஆழ்ந்து, அகன்று, நுணுக்கமாக அமைக்கப் பட்டிருக்கின்றது என்று அறிந்தால் ஆச்சிரியப்படுவீர்கள். தமிழில் ஒரு கருத்தை நம்மால் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்க இயலும். தமிழ், இலக்கணத்தின் முழுமையை கொண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழை தொல்காப்பியம் போன்ற மூல நூல்களின் ஊடே பார்க்கும்பொழுது அதன் அமைப்பில் வாழ்வியல் விதிகள், மாபெரும் அறிவியல், அண்டத்தின் ரகசியங்கள் போன்றவை பொதிந்துள்ளதை அறியலாம்.  அதுமட்டுமின்றி தமிழ்மொழி மொழி, செம்மொழி மற்றும் அறிவியல் மொழியை கடந்து அதுவே அறிவியலாகவும் விளங்குகின்றது சுருக்கமாக கூறின் தமிழை முறையாக கற்றால் சிறந்த மொழி ஆளுமையும்  உயரிய ஞானமும் பெற்று சகலகலா வல்லவனாக திகழலாம். அதனால்தான் அறிஞர்களும் மொழி ஆய்வாளர்களும் தமிழ்மொழி கற்கும்பொழுது ஆழமாக கற்க வேண்டு...